சில்லென சில்லென நீர்த்துளி பட்டு... மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு... பாடிக்கொண்டே நையாண்டி பவன் சமையலறைக்குள் நுழைகிறார் செந்தில்.
கவுண்டமணி: ஆமா இவரு பெரிய
பாகவதரு ! பாட்ட நிறுத்துடா படுவா !!
செந்தில்: அண்ணே... நான் சொல்ற
விசயத்த கேட்டா நீங்க பாடுறது மட்டுமில்லாம ஆடவும் செய்வீங்க.
க: நான் ஆடுறது இருக்கட்டும். மொதல்ல நீ ஆடாம
விஷயத்த சொல்லுடா !
செ: நம்ம ஹோட்டலுக்கு சங்கவி வந்திருக்காங்க.
க: ஆஹா ! நம்ம டாகுட்டர் முதுகு தேய்ச்சி
விடுவாரே அந்த சங்கவி தானே... வாடா போயி பாக்கலாம்.
பேச முனையும் செந்திலை பேசவிடாமல் அவசரப்படுத்தி அழைத்துச்செல்கிறார்
கவுண்டமணி.
சங்கவி முதுகு மட்டும் தெரியும்படி அமர்ந்திருக்கிறார்.
க: ஆஹா இதுவல்லவா முதுகு. டேய் மண்டையா ஒரு
லோடு சோப்பு வாங்கிட்டு வா. இன்னைக்கு பூரா நான் தேய்க்கணும்.
செ: அண்ணே ???
க: என்ன அண்ணே நோன்னேன்னுக்குட்டு ! படுவா
தள்ளி நில்லுடா !!
கவுண்டமணி சங்கவியின் முதுகை தடவிக்கொண்டே சங்கவியின் முகத்தை
திருப்பிப் பார்க்கிறார்.
க (அதிர்ச்சியாகி செந்திலை உதைத்தபடி): டேய் காலிபிளவர் தலையா ! இவனைத்தான் சங்கவி வந்திருக்கான்னு சொன்னியா.
இத ஏண்டா நீ மொதல்லயே சொல்லலை.
செ: அண்ணே. நீங்க எங்கண்ணே சொல்ல விட்டீங்க !
க: செய்யுறத செஞ்சிட்டு மூஞ்சியை
வச்சிருக்குறத பாரு, நயாபைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவன் மாதிரி. இப்ப இந்த
நாயிக்கு என்னடா வேணுமாம்.
செ: அண்ணே. நம்ம சங்கவி அண்ணன்...
க: அடேய் தயிர்வடை வாயா ! அவன் அண்ணன்னா அப்பா
நான் யாருடா ?
செ: சூ குறுக்குல பேசக்கூடாது. அண்ணன் கவிதை
புக்கு வெளியிட்டிருக்காரு. அதை உங்ககிட்ட படிச்சு காட்டிட்டு போலாமுன்னு
வந்திருக்காரு.
க: எங்க ? அந்த கவிஞ்சரு மூஞ்ச கொஞ்சம்
காட்டச்சொல்லு. அய்யா கவிஞ்சரே படிச்சுக் காட்டிட்டு நீங்க போயிடுவீங்க. நாங்க
எங்க போறது ?
சங்கவி: அதெல்லாம் முடியாதுண்ணே நான் படிச்சு
காட்டிட்டுதான் போவேன்.
க (காதை பொத்தியபடி மனதிற்குள்): அய்யோ கரிச்சட்டி தலையன் படிச்சு காட்டாம விடமாட்டான் போலருக்கே.
க: சரி படிச்சுத் தொலை !
சங்கவியின் கவியரங்கம் ஸ்டார்ட்ஸ்...
சங்கவி:
உன் பேரைக்
கவிதையாய் எழுதுவேன்,
ரசிப்பேன்,
மீண்டும் படிப்பேன்,
ஆனால் வெளியே சொல்லமாட்டேன்
ரகசியக் காதலியை
எப்படிச் சொல்வது ?
க: படுவா அதென்ன ரகசியக்காதலி
? கள்ளக்காதலி’ன்னு சொல்லித் தொலையேன்டா ! ஆமாம், இத வெளிய வேற சொல்லுவியா. அவ
புருஷன்காரன் பொளந்துறமாட்டான் ?
சங்கவி:
உன்னை நினைத்து
கவிதை எழுத
கணிப்பொறி முன்
உட்கார்ந்து யோசிக்கும்
போது கூடவே
மனைவியும் உட்கார்ந்து
என்ன யோசனை
என்கிறாள்.
க: ஆங் இவரு பெரிய்ய பூகோள ஆராய்ச்சியாளரு ! சொறி
புடிச்ச மொண்ணை நாயி கணிப்பொறிக்கும் எலிப்பொறிக்கும் வித்தியாசம் தெரியாம
மசால்வடையை மொறச்சி பார்த்தா அப்படிதான்டா கேப்பாங்க.
சங்கவி:
உன்னை நினைக்காமல்
ஒரு நாளும்
இருந்ததில்லையடி
நான் மட்டும் நினைத்து
என்ன பயன் ?
உனக்கு என் நெனப்பிருக்கா ?
சொல்லு புள்ள
க: டேய் ! இப்ப எதுக்கு நீ சொல்லு புள்ள’ன்னு
கேப்டன் மாதிரியெல்லாம் மிமிக்ரி பண்ணி காட்டுற. இவரு அப்படியே ஹாலிவுட் ஹீரோ டாம்
க்ருஸு இவரைப்பத்தியே நெனச்சிக்கிட்டிருக்காங்க. அதை வேற சொல்லணுமாம். மொதல்ல
உன்னையெல்லாம் கொல்லணும்டா.
சங்கவி:
உன் சிரிப்பினில்
சிரிப்பினில்
மேலே எழுத முடியலைடி
கற்பனையிலே
எனை கவிழ்த்தவளே
க: அடேய் ஆமைவடை தலையா அதுக்கு மேல இல்லை, நீ
எழுதுன ரெண்டு வரியே ஏற்கனவே தாமரையக்கா எழுதுனது தான். புதுசா ஏதாவது
எழுதுங்களேன்டா.
சங்கவி:
செல்லச் சிணுங்கல்
மிதமான சிரிப்பு
பார்க்கத் தூண்டும் கண்கள்
கடிக்கத் தூண்டும் உதடு
இது எதுவும் உன்னிடம்
எனக்கு பிடிக்கவில்லை
எனக்கு பிடித்ததெல்லாம்
உன் திமிர் தான்
க: ஏது உனக்கு ? படுவா ஏதோ ஒரு ஃபேக் ஐடி
ஃபிகருகிட்ட சாட் பண்ணி செம மாத்து வாங்கியிருக்க. வாங்குனதுக்கு அப்புறமும் அவ
திமிரு பிடிச்சிருக்கு, குமிரு பிடிச்சிருக்குன்னு பசப்புற. மவனே டேய். அடுத்தத
வாசி.
சங்கவி:
என்னவளின் இடையும்
என் கவிதையும்
சிக்கென்று இருக்கும்
இரண்டையும்
அனுபவித்து ரசிக்க வேண்டும்
ஆராயக்கூடாது
க: எனக்கு ச்சீ’ன்னு இருக்குதுடா ! அந்த
பொண்ணுக்கு ஒன் கவிதையை படிக்க குடுத்திருப்ப. வயித்தாலயும் வாயாலயும் போனா
சிக்குன்னு தாண்டா இருக்கும் சிக்கன் 65 மண்டையா !
சங்கவி:
என்னவள்
அழகு என்று
சொல்லிட முடியாது
இல்லை என்று மறுக்கவும்
முடியாது.
க: டேய் கவிதையை சொல்லுடான்னா என்னடா அறிக்கை
வுடுற. அட்டு ஃபிகரை வச்சிக்கிட்டு இதுக்கு லொள்ள பாத்தியா ? எகத்தாளத்த பாத்தியா
?
சங்கவி:
சைவமாக
இருக்க வேண்டும்
என்றுதான் வருவேன்
உன்னை நெருங்கி
உன் சுவாசத்தை
சுவாசிக்கும்போது
அசைவமாக
மாறி விடுகிறேன்.
க: ஏன் அந்த பொண்ணு வீட்டுல கருவாட்டு கொழம்பு
சாப்டுட்டு வந்துச்சாக்கும். லவ்வு பண்ணுங்கடா வேணாங்கல. அதை கொஞ்சம் பல்ல வெளக்கிட்டு
பண்ணுங்களேன்டா.
சங்கவி:
எனக்கு
எழுத வராது
என்று தெரிந்தும்
கவிதை எழுதச்
சொல்கிறாய்,
அடியேய்
உன் இதழ்
என் இதழுடன்
எழுதிய அளவிற்கு
கவிதை எழுத வராது.
க: ஒனக்கு எழுத வராதுங்குறது தான் நீ சொல்ற
கவிதையை கேட்டாலே தெரியுதேடா. அதை வேற ஒன்னின் கீழ் ஒன்னு போட்டு ஒரு பக்கத்த
ரொப்பிட்டியா ?
சங்கவி:
உன்னைப் பார்க்க
பேச... கொஞ்ச...
சண்டை போட...
சத்தியமாக ஆசை இல்லை...
க: டேய் என்னதிது ?
சங்கவி: கவிதைங்ணா.
க (செந்திலிடம்): டேய் மசால்தோசை வாயா !
செ: சொல்லுங்கண்ணே.
க: அடுப்படியில ஒரு தாடிக்காரன் ஒளிஞ்சிருப்பான்
அவன வரச்சொல்லு !
உள்ளிருந்து தண்டோரா போட்டபடி மணிஜி
வர, தலைதெறித்து ஓடுகிறார் சங்கவி !!!